மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து வறுமைக்கோட...
மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 17 பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. கௌரவ வட மாகாண சபை உறுப்பினர்களுக்கென 2017 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் இருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.
மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயம், சென்ஜேம்ஸ் மகளிர் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, சங்கானை சைவப் பிரகாச வித்தியாலயம், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் உள்ளிட்ட 13 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் ரூபா ஒதுக்கீட்டில் இவ்வாறு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மருதனார்மடத்தில் அமைந்துள்ள வலிகாமம் வலைய கல்வி பணிமனை வளாகத்தில் வைத்து அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வலைய கல்வி பணிமனை அதிகாரிகளால் 08.01.2017 அன்று மாலை 02.30 மணியளவில் மாணவர்களிடம் மிதிவண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு மாணவி உள்ளிட்ட நான்கு மாணவர்களுக்கு இவ்வாறு அறுபதாயிரம் ரூபா ஒதுக்கீட்டில் 4 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி வலைய கல்வி பணிமனை வளாகத்தில் வைத்து அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க 08.01.2017 அன்று காலை 10.30 மணியளவில் தென்மராட்சி வலைய கல்வி பணிமனை அதிகாரிகளால் மாணவர்களிடம் மிதிவண்டிகள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.