2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்...
2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் நடிகை ஓவியா பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார்.
இந்த நிலையில், இவர் தற்போது சினேகன் கதாநாயகனாக நடிக்கும் பனங்காட்டு நரி படத்தின் 1st லுக் புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஓவியா, சினேகன் நடிக்கும் இந்த படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மலேசியாவில் தொடங்கியுள்ளது.