குறித்த நிறுவனத்தில் 500 வெற்றிடங்களுக்கு வடபகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்கவுள்ளது. கல்வித்தகமை என்பதை விட முன்னேறத் துடிக்கும் இளையோர்க...
குறித்த நிறுவனத்தில் 500 வெற்றிடங்களுக்கு வடபகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்கவுள்ளது.
கல்வித்தகமை என்பதை விட முன்னேறத் துடிக்கும் இளையோர்களுக்கே இந் நிறுவனம் முன்னுரிமை வழங்கவுள்ளது.
25ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் இந்த வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. குறித்த நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் பணியாளர்கள் இலங்கையில் மட்டும் பணியாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்ற விரும்புபவர்கள்
தையல் மெசின் இயக்குனர்கள் மற்றும் ஆடைத் தயாரிப்பாளர்கள், ஜம்பர் போன்ற வேலைகளுக்கு எந்தவித அனுபவம் இல்லாதவர்களுக்கும் பயிற்சி வழங்கி குறித்த நிறுவனம் தன்னுடன் இணைத்துக் கொள்ளவுள்ளது. பயிற்சியின் போது 22,500.00 ரூபா சம்பளமும் பயிற்சியின் பின்னர் 35 ஆயிரத்து 500 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பளமும் மற்றும் இலவச தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.