யாழ் மாநகர சபை, தூய நகர திட்டத்தை நோக்கி பயணிப்பதற்கு இராணுவ ஆளணியைத் தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதியளித்ததாக” யாழ். மாந...
யாழ் மாநகர சபை, தூய நகர திட்டத்தை நோக்கி பயணிப்பதற்கு இராணுவ ஆளணியைத் தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதியளித்ததாக” யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் இன்று (18) தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கும் யாழ். மாநகர மேயர் ஆனோல்ட்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய சந்திப்பானது நமது நகரை தூய்மை நகராக்குதல் தொடர்பாக அமைந்தது. யாழ் மாநகரை சுத்தமாக்கி தூயநகர் நோக்கி பயணிப்பதற்கு கழிவகற்றல் என்பது எமக்கு மிகவும் சவாலாக உள்ளது.எனவே கழிவகற்றல் பொறிமுறை ஒன்று உருவாக்குமாறும் அதனை செயற்படுத்த தனது ஒத்துழைப்பைத் தருவதாகவும் ஆளுநர் தெரிவித்ததாக தெரிவித்தார்..
மேலும், யாழ் மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவு அகற்றல், வடிகால் சீரமைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் இராணுவத்தினரை உள்ளீர்க்க முடியும், இராணுவத்தினரும் மக்களுக்கான பணியினையே மேற்கொள்கின்றனர் எனவே ஒற்றுமையாக நாம் இத்திட்டத்தை கொண்டு நடாத்தவேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்ததாக தெரிவித்தார்.. இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்த்க்கது.