இந்தியாவில் வணிக வளாகம் ஒன்றில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த தாயாரின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை இயந்திரப் படியில் சிக்கி உ...
இந்தியாவில் வணிக வளாகம் ஒன்றில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த தாயாரின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை இயந்திரப் படியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
குறித்த வணிக வளாகத்தில் தங்களது 10 மாத குழந்தையுடன் கணவன் மனைவி இருவர் சென்றுள்ளனர்.இந்த நிலையில் இயந்திரப் படியில் சென்று கொண்டிருக்கும் போது மனைவியிடம் செல்ஃபிக்கு போஸ் தர கேட்டுள்ளார் கணவன்.இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி குறித்த பெண்ணின் கைகளில் இருந்த 10 மாத குழந்தையானது தவறி கீழே விழுந்துள்ளது.
குழந்தை பாதுகாப்பு கம்பியில் மோதி சுவருக்கும் இயந்திரப்படிக்கும் இடையில் சிக்கி பின்னர் தரையில் விழுந்துள்ளது.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்ற பார்வையாளர்கள் விரைந்து சென்று குழந்தையை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்து குழந்தையை மீட்டு பொதுமக்களும் குழந்தையின் பெற்றோரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் குழந்தை தரையில் விழுந்த உடனேயே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.