அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து யாழ். பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது. நம் நாட்டி...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து யாழ். பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது.
நம் நாட்டில் அதிகரித்து செல்வது என்றால் விலைவாசி மட்டும்தான் .வருமான உயர்வின்றி விலைவாசி உயர்வை எப்படி மக்களால் சமாளிக்க முடியும் . இதன் அடிப்படையிலே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட இப் போராட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.