மியன்மாரில் அரசியல் நெருக்கடி நிலைமைகள் ஓய்ந்து தற்போது ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு வன்முறைகள் காரணமாக அங...
மியன்மாரில் அரசியல் நெருக்கடி நிலைமைகள் ஓய்ந்து தற்போது ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு வன்முறைகள் காரணமாக அங்கு தீவிரநிலைமை தோன்றியுள்ளது.இதனை சர்வதேச நாடுகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையும் தமது பங்கிற்கு மியன்மார் மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
இது இவ்வாறிருக்க அந்த நாட்டின் மீது இயற்கைக்கும் அனுக்கிரகம் இல்லாமல் போய்விட்டது. கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண காலநிலை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக சுமார் 5,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளனர்.
பிரதான நகரங்களான யன்கொன், மன்டலே, மற்றும் நைபிடடேவ் உள்ளிட்டவற்றில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் மற்றும் பெருந்தெருக்களை மூழ்கடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரங்களுக்கும், இரண்டு கிராமங்களுக்கும் நீரை விநியோகிக்கும் சுவார் நீர்பாசன நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுப்பகுதி உடைந்த நிலையில், பெருந்தெருவுக்கு அண்மையில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக மியன்மாரின் தீயணைப்பு படை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாலத்திற்கு கீழாக வௌ்ளம் கரைபுரண்டு செல்வதையும், படிப்படியாக உயர்வடைவதையும் காணொளி சித்தரிக்கின்றது.
இதன்காரணமாக, இருப்பிடங்களை இழந்த பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள மக்கள் வௌியேறுவதற்கு தயாராகி வருகின்றனர். எனினும், இதுவரை பாரிய சேதங்களோ, உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என்று அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த அணைக்கட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு சுவார் சிற்றோடைக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ளது. சுமார் 216,350 கன ஏக்கர் நீரை சேமித்து வைக்க முடியும் என்பதுடன் 20,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்பாசனத்தை வழங்க முடியும் என்று மியன்மாரின் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.