எனது அரசியல் பிரவேசம் தனிப்பட்ட ரீதியான எனது மக்கள் செல்வாக்கால் உருவாக்கப்பட்டது. ஏனையவர்களைப் போன்று தேசிய கட்சிகளின் பின்னால் அழைந்து அதன...
எனது அரசியல் பிரவேசம் தனிப்பட்ட ரீதியான எனது மக்கள் செல்வாக்கால் உருவாக்கப்பட்டது. ஏனையவர்களைப் போன்று தேசிய கட்சிகளின் பின்னால் அழைந்து அதனூடாக பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் செல்வாக்குடன் தனித்து நின்று பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலையினை இன்று வன்னி மாவட்டத்தில் நான் ஏற்படுத்தி இருக்கின்றேன் எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு மொட்டு கட்சியின் சிலர் எனக்கு தொலைபேசியின் ஊடாக விமர்சனம் செய்திருக்கின்றார்கள். ஆகவே இவர்களுடனான பயணம் எனக்கு அவசியமானதல்ல. இவர்களுக்கே நான் அவசியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தாமரை மொட்டு கட்சியின் உடனான கூட்டணி சம்பந்தமாக உரையாடியிருந்தேன். அதைவிட முக்கியமாக அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவும் இவ்வேட்பாளரின் தமிழ் மக்கள் சம்பந்தமான நிலைப்பாடு என்ன என்பதையும் வினவியிருந்தேன். அதற்கு நேர்மையான முறையில் முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனது தமிழ் மக்கள் சம்பந்தமான எண்ணங்களை வெளிப்படுத்தினார். அதனை நான் வரவேற்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வன்னி மாவட்ட தமிழ் மக்கள் சம்பந்தமான கோரிக்கைகளையும் உள்வாங்குவதற்கு தனது விருப்பத்தினை தெரிவித்தார். அதே நேரம் தாமரை மொட்டு கட்சியின் சில பிரமுகர்கள் நான் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்ததையிட்டு விமர்சனங்களை தெரிவித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவரின் தனி செல்வாக்கு என்பதால்தான் தாமரை மொட்டுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆகவே அவரிடம் தாம் நாங்கள் கூட்டணி சம்பந்தமாக பேச முடியுமேயொளிய வேறெவரிடமும் பேசத்தேவையில்லை. அதே நேரம் எமது கூட்டணி சம்பந்தமான பசில் ராஜபக்ஷவுடன் ஏற்கெனவே நான் பேசியுள்ளேன். அவரும் இதற்கு முழுமையான முறையிலே தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். ஆகவே எனக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. என்னால் எந்தவொரு தேசிய கட்சியின் ஆதரவும் இன்று தனித்து போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற அதிகூடிய சூழ்நிலையை வன்னி மாவட்ட மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இனவாதிகளாகத் தான் தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். இவர்கள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கான தீர்வினை தங்க தட்டில் வைத்துக் கொடுக்கப்போவதில்லை எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் செல்வாக்குடன் தனித்து நின்று பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலையினை இன்று வன்னி மாவட்டத்தில் நான் ஏற்படுத்தி இருக்கின்றேன் எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு மொட்டு கட்சியின் சிலர் எனக்கு தொலைபேசியின் ஊடாக விமர்சனம் செய்திருக்கின்றார்கள். ஆகவே இவர்களுடனான பயணம் எனக்கு அவசியமானதல்ல. இவர்களுக்கே நான் அவசியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தாமரை மொட்டு கட்சியின் உடனான கூட்டணி சம்பந்தமாக உரையாடியிருந்தேன். அதைவிட முக்கியமாக அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவும் இவ்வேட்பாளரின் தமிழ் மக்கள் சம்பந்தமான நிலைப்பாடு என்ன என்பதையும் வினவியிருந்தேன். அதற்கு நேர்மையான முறையில் முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனது தமிழ் மக்கள் சம்பந்தமான எண்ணங்களை வெளிப்படுத்தினார். அதனை நான் வரவேற்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வன்னி மாவட்ட தமிழ் மக்கள் சம்பந்தமான கோரிக்கைகளையும் உள்வாங்குவதற்கு தனது விருப்பத்தினை தெரிவித்தார். அதே நேரம் தாமரை மொட்டு கட்சியின் சில பிரமுகர்கள் நான் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்ததையிட்டு விமர்சனங்களை தெரிவித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவரின் தனி செல்வாக்கு என்பதால்தான் தாமரை மொட்டுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆகவே அவரிடம் தாம் நாங்கள் கூட்டணி சம்பந்தமாக பேச முடியுமேயொளிய வேறெவரிடமும் பேசத்தேவையில்லை. அதே நேரம் எமது கூட்டணி சம்பந்தமான பசில் ராஜபக்ஷவுடன் ஏற்கெனவே நான் பேசியுள்ளேன். அவரும் இதற்கு முழுமையான முறையிலே தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். ஆகவே எனக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. என்னால் எந்தவொரு தேசிய கட்சியின் ஆதரவும் இன்று தனித்து போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற அதிகூடிய சூழ்நிலையை வன்னி மாவட்ட மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இனவாதிகளாகத் தான் தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். இவர்கள் ஒரு போதும் தமிழ் மக்களுக்கான தீர்வினை தங்க தட்டில் வைத்துக் கொடுக்கப்போவதில்லை எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.