பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அவர் நாளை...
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அவர் நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைவரும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஏற்கனவே ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.