மேலும் 54 இலங்கையர்கள் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காக குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 53 பெண்கள் மற்ற...
மேலும் 54 இலங்கையர்கள் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காக குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குவைட்டில் இருந்து இன்று வருகை தந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள், பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் இக்குழுவில் அடங்குவர்.
இவர்கள் குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட தனிநபர்களின் குழு, தங்கள் ஆரம்ப பணியிடங்களை விட்டு வெளியேறி, நாட்டின் விதிகளை மீறி வேறு இடங்களில் வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் தங்கியிருந்துள்ளனர். முந்தைய அறிவிப்பின்படி, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சுமார் 2,000 வீட்டுப் பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.