யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று மன்னார் மா...
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று மன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையபடுத்தியும் ,மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.
நேற்றும் இன்றைய தினம் வடக்கு மாகாணம் தழுவியரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.