இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி ஆறாவது தடவையாக 2023 ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் சம்பியனை கைப்பற்றியது. 2023 உலக...
இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி ஆறாவது தடவையாக 2023 ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் சம்பியனை கைப்பற்றியது.
2023 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று(19) இந்தியாவின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் இந்தியா சார்பில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களையும்,விராட் கோலி 54 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரோஹித் சர்மா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்ராக் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வூட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மக்ஸ்வெல் மற்றும் சம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா சார்பில் ஹெட் 137 ஓட்டங்களையும் லபுஷேன் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இறுதியில் 43 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்மூலம் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு தடை போட்டு, சொந்த மண்ணில் வீழ்த்தி கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி ஆறாவது தடவையாக 2023 ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் சம்பியனை கைப்பற்றியது.