இணுவில் பொது நூலகத்தின் கனடா அமைப்புக்குழுவின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற மருத்துவ, சமூக நலத்திட்டம் - 2024 மேற்படி நிகழ்வானது 02/0...
இணுவில் பொது நூலகத்தின் கனடா அமைப்புக்குழுவின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற மருத்துவ, சமூக நலத்திட்டம் - 2024
மேற்படி நிகழ்வானது 02/02/2024 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில்
இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப விரிவுரை மண்டபத்தில்
பொது நூலகத் தலைவர் திரு . ம .கஜந்தரூபன் தலமையில்
இடம் பெற்றது.
இதில் பொது நூலக போசகர்களான பேராசிரியர் .க. தேவராஜா ,
திரு.இரா அருட்செல்வம் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை இடம் பெற்றததனைத் தொடர்ந்து
திருநெறிய தமிழ் மறைக்கழக போசகர் பண்டிதை வை. கணேபிள்ளை அவர்களின் வாழ்த்துரையும்
மத்திய மருந்தக வைத்தியரின் உரையும் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக கனடாவில் இருந்து வருகை தந்த கனடா அமைப்புக் குழு உறுப்பினரான. திருநாவுக்கரசு மோகனதாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
இணுவில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலைத்திற்கான,(Inuvil Dispensery) ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருநெறிய தமிழ் மறைக் கழக மாணவர்களுக்கான கொடுப்பனவும்
மற்றும் ஏனைய திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
இச்செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவரும் கனடா அமைப்புக்குழு அங்கத்தவர்கள், அபிமானிகளுக்கு நன்றிகள்.
மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இச்செயற்திட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்விற்கு பயனாளிகளும், நூலக அங்கத்தவர்களும், ஆர்வலர்களும் ,நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.